விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, பெண் பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பெத்தநாயக்கன் குப்பத்தைச் சேர்ந்த பெண்ணை, கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், சுத்தியல் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளார். மேலும், அப்பெண்ணை கார்மாங்குடி ஆற்றில் வீசிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: