தானே: சரத்பவார் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கேதகி சிதாலேவியின் ஜாமீன் மனுவை தானே நீதிமன்றம் நிராகரித்தது. மேற்குவங்க மாநில மராத்தி டிவி நடிகையும், திரைப்பட நடிகையுமான கேதகி சிதாலே கடந்த சில தினங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதில், ‘உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது. நீங்கள் அவர்களை (குறிப்பிட்ட பிரிவினர்) வெறுக்கிறீர்கள்’ என்று ெதரிவித்திருந்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், கேதகி சிதாலே மீது ஐபிசி பிரிவுகள் 500, 501, 153ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து மே 15ம் தேதி கைது செய்தனர்.