திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி, உடுமலை வனசரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளின் உதவியுடன் கணக்கெடுப்பு பணிகளில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஆணைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனசரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுபன்றி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், உடுமலை, அமராவதி வனசரகத்தில்கோடைகால கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.