திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 1-ம் நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1660 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.