டெல்லி: ஒன்றிய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறவுள்ள பாரத் ட்ரோன் மஹோத்சவத்தில் இந்தியாவில் தயாரான 70 ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதா்கள், ஆயுதப் படை வீரா்கள், ஒன்றிய ஆயுதப் படை வீரா்கள், பொதுத்துறை நிறுவனப் பிரதிநிதிகள், தனியாா் நிறுவனத்தினா் மற்றும் ட்ரோன் புதிய நிறுவனத்தினா் உள்ளிட்ட 1600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டோா் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது.