கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் கல்லூரி மாணவன் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சின்ன லத்தேரி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சரண்குமார் (20). இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் சரண்குமார் தனியாக அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி சரண்குமாரின் மாமா ரமேஷின் மகள் வாலிபர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். இதனை பார்த்த சரண்குமார், மாமா ரமேஷிடம் கூறியுள்ளார். அதற்கு ரமேஷ், ‘‘எனது மகள் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டாள்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் சரண்குமாரை ரமேஷ் அடித்து உதைத்துள்ளார்.