4 ஆண்டாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தூத்துக்குடியில் பதுங்கிய சென்னை ரவுடி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எழில்நகர் எம்ஜிஆர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (46). இவரது மனைவி சுமதி, வரதட்சணை கொடுமையால் கடந்த 2006ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சுந்தரலிங்கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவானார். கொடுங்கையூர் போலீசார் அவரை தேடியபோது, தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருப்பது தெரிந்தது.

தனிப்படை போலீசார் அங்கு சென்று, சுந்தரலிங்கத்தை கைது செய்து, சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: