ரயில் மோதி இளம்பெண் பலி

தாம்பரம்:  ஊரப்பாக்கம்  வெங்கடேஸ்வரா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் எமி கார்மைக்கேல் (26).   பெற்றோரை இழந்த இவர், வாடகை வீட்டில் தோழிகளுடன் தங்கி, ஒரகடத்தில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர்   ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து  சென்றபோது, ரயில் மோதி இறந்தார்.

Related Stories: