கன்டெய்னரில் தீ 1 கோடி மதிப்பு பொருட்கள் நாசம்

சென்னை: ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனம், திருவள்ளூர் அருகே போளிவாக்கம் பகுதியில் உள்ளது. இங்கிருந்து ₹1 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரியில் சாலை மார்க்கமாக டெல்லி புறப்பட்டது. வழியில், கன்டெய்னரில் தீப்பற்றி அதிலிருந்த பொருட்கள் முழுவதுமாக  எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: