பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்கிறது: எல்.முருகன் பேச்சு

சென்னை: பிரதமர் மோடி தலையிலான ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன். சாமானிய மக்களின் ஆளுநரையும் வரவேற்கிறேன். ஆற்றல் மிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வரவேற்கிறேன். இங்கு வருகை தந்துள்ள அமைச்சர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் வரவேற்கிறேன்.

 தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் சாலை, ரயில்வே  திட்டங்கள் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை பிரதமர் மேம்படுத்துகிறார். புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார்.  இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் பேரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரையாற்றினார். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை சொன்னதும் சில நொடிகளுக்கு பிரதமர் மோடி முன்னிலையில் தொண்டர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு பேச்சை நிறுத்தினார். அதன் பின்னரே தனது பேச்சை தொடர்ந்தார்.

Related Stories: