ஏரிக்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: திருமணத்திற்கு சென்றபோது அதிகாலை சோகம்

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கிரெட்டி. இவரது மனைவி மதுலதா. மகள் குஷிதாரெட்டி, மகன் தேவன்ஷ்ரெட்டி. இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் இன்று சித்தூர் மாவட்டம் பலமனேரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கங்கிரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். மதனப்பள்ளி அருகே உள்ள புங்கனூர் சாலை வழியாக வந்தபோது ஏரி மீதுள்ள சிறுபாலத்தை கடக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராமல் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனை அவ்வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து கூச்சலிட்டனர். பின்னர் ஏரியில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மொரவப்பள்ளி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் காரை மீட்டனர்.

அதற்குள் அதில் இருந்த தம்பதி உட்பட 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: