புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் கோடை விடுமுறையை ஒட்டி நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் ஏராளமானோர் ஆர்வாமுடம் கலந்து கொண்டு உள்ளனர். கோடை விடுமுறையை பயனுள்ளதாக புதுக்கோட்டையில் அரசு சார்பில் நீச்சல் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சி முகாம்கள் நடத்தபட்டு வருகின்றனர், மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனி தனியாக 12 நாட்கள் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.