சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளை விட ரேசன் அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி, கடந்த அதிமுக ஆட்சியில் 14 பேர் கைதான நிலையில் திமுக ஆட்சியில் ஓராண்டில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.