டெல்லி: டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் இனி மேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.