முன்விரோதத்தால் கொலை செய்ய திட்டம்!: சென்னை கொரட்டூர் அருகே பதுங்கி இருந்த 7 ரவுடிகளை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை கொரட்டூர் அருகே மாதனாக்குப்பத்தில் பதுங்கி இருந்த 7 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரில் உள்ள நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். மாதனாக்குப்பத்தில் வீடு ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆவடி பிரகாஷ், புத்தாகரம் ஜெயக்குமார், கல்பாளையம் பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைதாகினர்.

Related Stories: