தென்காசி: குற்றாலத்தில் இரண்டு தினங்களாக சாரல் இல்லாததுடன் வெயிலும் காணப்பட்டது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் 15 தினங்கள் முன்னதாக தொடங்கியது. கடந்த 8 தினங்களாக சாரல் நன்றாக பெய்தது. சீசன் களைகட்டி காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சாரல் பெய்யவில்லை. மேலும் வெயிலும் காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது.