டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர லஞ்சம் பெற்ற புகாரில் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடக்கிறது. சுமார் 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டினர்.