காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலர் தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது, பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல ஆப்கானில் 4வது பெரிய நகரமான மசர் இ சாரிப்பில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.