செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (38). இவருக்கும் சிங்கபெருமாள் கோயில் அருகே விஞ்சியம்பாக்கத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அந்த நேரத்தில் அன்பரசன், முள்ளிக்கொளத்தூரை சேர்ந்த புனிதா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த பிரியா, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் 2015ம் ஆண்டு புகார் அளித்தார்.