திருத்தணி: திருத்தணி அருகே பி.சி.என்.கண்டிகையில் பங்காரும்மா(64) என்ற மூதாட்டி மற்றும் அவருடன் படுத்தபடுக்கையாக 90 வயதில் மாமியாரும் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு பங்காரும்மா, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மூதாட்டியின் மாமியார் வீட்டின் பின்புறம் உள்ள தனியறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.