மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 18ம் தேதி 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகள், ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது.