சென்னை: லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒளியேற்றி உள்ளது என விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் முதல்வர் பேசினார். மாணவிகளின் தனித் திறமைக்கு கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பேசினார். மேலும் கல்லூரி சென்ற போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றதை நினைவு கூர்ந்து பேசினார். நான் பள்ளிக்கு போகும்போது, ஸ்டெல்லா மேரிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் ஏறுவேன். 29c பேருந்தில் தான் அப்போது ஏறுவேன், சில நாட்களுக்கு முன் கூட அதே பேருந்தில் ஏறி ஆய்வு செய்தேன்.