பியோங்கியங்: வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட சிலமணி நேரத்தில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகையின் போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தும் என ஏற்கெனவே தகவல் வெளியானது.