ராமேஸ்வரம் : மும்பை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஜேக்கப் பார்ஜர் சரக்கு கப்பல் மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடல் பகுதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. 28 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலம், 362 டன் எடை கொண்ட இக்கப்பல் வந்த நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பலத்த காற்று மற்றும் மிகவும் சீற்றத்துடன் இருந்தது. இதனால் கப்பல் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.