ராமநாதபுரம்: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீனவ பெண்ணை வன்கொடுமை செய்து கொன்றவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படையினர் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.