கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தைல மர தோப்பு வெட்டப்பட்டுள்ளது அதன் பிறகு காய்ந்து கிடந்த சருகுகள் திடீரென்று தீ பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது சேதமான பகுதிக்கு அருகில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய அருள் தாஸ் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்த சருகுகளின் வெப்பம் மூலம் வாழை தோப்பும் எரிந்தும் சேதமடைந்துள்ளது.