கோத்தகிரி : ஹெல்மெட் தங்களின் உயிர் கவசம் என்பதை மனதில் கொண்டு அணிய வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிவது குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் என்பதால் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர். மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்தும், முறையாக ஹெல்மெட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.