செம்பனார்கோயில் : தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பூம்புகார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் கீழப்பெரும்பள்ளம் கேது கோயில், திருவெண்காடு புதன் கோயில் மற்றும் அங்கு உள்ள பஞ்ச நரசிம்மர் கோயில்களுக்கு பக்தர்கள் வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பஸ், கார், டூரிஸ்ட் வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்து காட்சியளிக்கிறது.