சென்னை: சீன நாட்டினருக்கு விசா கிடைக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தவிருக்கிறது. சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. விசா விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான பாஸ்கர ராமனை சிபிஐ ஏற்கனவே கைது செய்துள்ளது.