ராமேஸ்வரத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. மக்கள் சாலை மறியல்!!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வடகாடு கிராம மீனவப் பெண் சந்திரா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மீனவப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் போராட்டம் நடைபெறுகிறது.இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லக்கூடிய பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து பாதையின்றி சாலையில் காத்துக்கிடக்கிறது.

Related Stories: