பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவர்

* சடலத்துடன் 2 நாளாக இருந்த மனைவி

* போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

சென்னை: சென்னை புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவை சேர்ந்தவர் அசோக்பாபு (53). இவர் ஆம்பூரில் லெதர் கம்ெபனி மற்றும் கட்டுமான வேலை செய்து வந்தார். இவரது மனைவி பத்மினி (48) மற்றும் மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி நூம்பலில் வசித்து வருகிறார். மகன் பெங்களூருவில் கட்டிட வடிவமைப்பாளர்.இந்நிலையில் கணவன், மனைவி மட்டும் புரசைவாக்கம் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.  பத்மினிக்கு கடந்த 2011ல் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை ெபற்று வந்துள்ளார். இதற்கிடையே, அசோக்பாபு மகள் கடந்த 21ம் ேததி தனது தந்தையுடன் போனில் பேசியுள்ளார். அதை தொடர்ந்து 22 மற்றும் 23ம் தேதிகளில் போன் செய்தபோது யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்து நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து, வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அசோக்பாபு நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அருகே அவருடைய மனைவி பத்மினி உட்கார்ந்து கொண்டு கதவை திறக்காமல் இருந்துள்ளார்.பின்னர், போலீசார் தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த அசோக்பாபு உடல் அருகே இருந்த அவருடைய மனைவி பத்மினியை வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இறந்து கிடந்த அசோக் பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, அசோக்பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அசோக்பாபு இறப்பு குறித்து முழுமையான தகவல் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கணவரின் சடலத்துடன் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி ஒருவர் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: