திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சேவூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மக்களிடம் ரூ.1.10 கோடி வசூலித்து முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.