நீலகிரி: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக 59வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கோடையை கொண்டாடும் விதமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி களைகட்ட தொடங்கியுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தத்ரூபமான மலர் சிற்பங்களையும், மலர்களையும் கண்டு ரசித்தனர். 6 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.