இளம் சதுரங்க போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

சென்னை: இணையம் வழியாக இளம் சதுரங்க போட்டியாளர்கள் பங்குபெற்ற விரைவுப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ணானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் திறமையாக விளையாடி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து பல சுற்றுகளில் வாகை சூடிய இவர் ஐந்தாவது சுற்றில் கார்ல்சனை விஞ்சினார். அவரது மதிப்பீடு எண்ணிக்கையை 12 புள்ளிகளுக்கு கொண்டு சென்று தலைமை இடத்தில் 5 வது  இடத்தைப் பெற்றார். இவ்வாறு 3 மாதங்களில் பிரக்ணானந்தா இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நார்வே உலகச் சாம்பியனைத் திகைக்க வைத்தார்.

மேலும் அவர் பிப்ரவரியில் ஏர்திங்ஸ் மாஸ்டர் ஸில் 8 சுற்றில் வெற்றி பெற்றார். இதுவரை நடந்த போட்டியில் நார்வே சதுரங்க வீரரை எதிர்த்து வெற்றிப்பெற்ற 3 வது இந்தியர் என்ற சிறப்பையும் பிரக்ணானந்தா பெற்றுள்ளார். அவரது மகத்தான வெற்றிக்கு தாளாளர் எம்.வி.எம்.வேல்மோககன், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: