டெல்லி : காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடப்பு ஆண்டில் வெப்பநிலையின் அளவு 30 மடங்கு அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் காரணமாக வெப்பத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வண்ணம் உள்ளது. கடந்த மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக்கழக ஆய்வாளர் கூறியுள்ளார்.