பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் பகல், இரவு என தொடர்ந்து போக்குவரத்து மிகுந்த இரு பஸ்நிலையம் மத்தியில் உள்ள டிராபிக் சிக்னல் பகுதி, கோவைரோடு காந்திசிலை பகுதி, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மின் கோபுரம் ஒளிர்கிறது. பின்னர் மறுநாள் அதிகாலை அணைக்கப்படுகிறது மேலும், போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய இடங்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, டிரைவர்கள் விதிமுறைகளை கையாண்டு வாகனங்களை இயக்குவதற்கு வசதியாக, ஆங்காங்கே தனியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சில இடங்களில் உள்ள தானியங்கி சிக்னல்கள் இன்னும் செயல்படாமல் உள்ளது.