திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசலு தெரு பகுதியில் ஆருத்ரா கோல்டு என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், ஒரு நபர் சுமார் 1 லட்சம் தொகையை டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் தரப்படும் என பல சலுகையை அறிவித்துள்ளனர். இந்த சலுகையால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.