வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு கூட்ரோடு பகுதியில் அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு, இன்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது மர்ம நபர்கள் சிலர் அடகு கடையின் பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.