பெர்லின்: வரலாற்றில் முதல் முறையாக, உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடி ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஐநாவின் அகதிகளுக்கான ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறுகையில், ‘‘எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ நாடுகளில் ஏற்பட்ட வன்முறை, குழுக்களிடையேயான மோதல்களால் கடந்த ஆண்டு இறுதியில் உலகளவில் அகதிகள் எண்ணிக்கை 9 கோடி என இருந்தது. தற்போது, உக்ரைனில் நடந்து வரும் போரால் இதுவரை இல்லாத அளவில் 10 கோடி ஆக அதிகரித்துள்ளது.