எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற குறிக்கோள்தான் திராவிட மாடல்: அமைச்சர் பேச்சு

திருத்தணி: திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார்.  ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்.கே.கிருஷ்ணன், சி.ஜே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார்.இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்து மக்கள் உரிமைக்காக போராடுகிற கட்சிதான் திமுக. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற குறிக்கோள்தான் திராவிட மாடல்.

முதல்வர்களில் 88 சதவீதம் பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் நம்பர் 1 முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அல்ல. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் வரவேண்டும் அதுதான் எனது குறிக்கோள். அதுதான் எனது மகிழ்ச்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தற்போது அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். தொண்டர்கள் யாரும் இல்லாத கட்சியாக அதிமுக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தின் இறுதியில் 7வது வட்ட செயலாளர் கே.பாபு நன்றி கூறினார்.

Related Stories: