திருத்தணி: திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்.கே.கிருஷ்ணன், சி.ஜே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார்.இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்து மக்கள் உரிமைக்காக போராடுகிற கட்சிதான் திமுக. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற குறிக்கோள்தான் திராவிட மாடல்.