புதுடெல்லி: ‘நீதிபதிகள் மீது குற்றம்சாட்டுவது இப்போது பேஷனாகி விட்டது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 2 வார சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்திரசுட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனுதாரருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை பதவியில் இருந்து திரும்ப பெற மனுதாரர் கோரும் செயலை உச்சநீதிமன்றம் மோசமாக பார்க்கிறது.