விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அகமது (57). இவர் விழுப்புரம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுப்பது, டெண்டர் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்துள்ள அகரம் செங்கமேடு செல்லும் சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கழுத்துப் பகுதியின் குரல்வலையில் ஆழமாக அறுபட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.