மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த மேலகண்டமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பிளாண்ட் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் காஸ் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய், காஸ் அனுப்புவதற்காக கமலாபுரம் வழியாக பூமிக்கடியில் 6 அடி ஆழத்தில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு அதிலிருந்து பிரிக்கப்படும் காஸ் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமக்கோட்டை அரசு பவர் பிளாண்டுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியாக அனுப்பப்பட்டு காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஓஎன்ஜிசி சார்பில் குழாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்களாகும்.