செய்வினை வைத்து மாட்டை கொன்றதாக அண்ணன் கொலை: தலைமறைவான தம்பியை தேடும் போலீஸ்

தார்மபுரி: தார்மபுரி அருகே செய்வினை வைத்து மாட்டை கொன்றுவிட்டதாக அண்ணனை வெட்டி கொன்று விட்டு தம்பி தலைமறைவாகிவிட்டார், தடுக்க வந்த அண்ணியையும் வெட்டி விட்டு தப்பியுள்ளார். அண்ணனுக்கு இரண்டு மாணவிகள், தம்பிக்கு மூன்று மாணவிகள், அருகருகே மாணவிகளுடன் வசித்து வந்த நிலையில் செய்வினை வைத்து மாட்டை கொன்றுவிட்டதாக கூறி அண்ணன் கொல்லப்பட்டுள்ளார் மூன்று மனைவிகளுடன் வாழ்ந்துவரும் தம்பி  அண்ணனின் முதல் மனைவியுடனான பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு தன் கொலைக்கு கரணம் என கூறப்படுவது உண்மையா? தார்மபுரி மாவட்டம்  பாப்பாரப்பட்டி அருகே உள்ள சாக்கிலமத்து கிராமத்தை சேர்த்தவார்.

45வது தன வெங்கடேசன் கரும்பு வெட்டும் தொழிலாகியாக இருந்தார் 40து வயதான குமார் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார், சகோதரரான இருவரும்  அருகருகே வசித்து வந்தனர். இந்நிலையே தம்பி குமார் வீட்டில் வளர்த்துவந்த மாடு ஒன்று சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. இதற்கு அண்ணன்னு அண்ணனின்  இரண்டவந்து மனைவியான அண்ணியும் சேர்ந்து செய்வினை வைத்ததுதான் கரணம் என குமார் நம்பியதாக தெருகிறது, இதனால் அவர்களுக்குள் சண்டை இருந்துள்ளது இந்நிலையில் நேற்று  சகோதர்க்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் வீட்டில் இருந்த அறிவாளை எடுத்து அண்ணன் வெங்கடேசனை குமார் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். தடுக்கவந்த வெங்கடேசனின் இரண்டவந்து மணைவி பெருமா வையும் வெட்டியதாகவும் அதில் அவரின் ஒரு கை மற்றும் விரல்கள் துண்டாகி படுகாயம் அடைந்துள்ளார் அக்கம் பக்கத்தினர் உடனநடியாக பெருமா வைய் மீட்டு தர்மாபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் செய்வினை விவகாரம் இல்லாமல் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் வேற தகராறு இருந்ததும் தெரியவந்துள்ளது.

குமார் க்கு மூன்று மனைவிகள் உள்ள நிலையில் அண்ணனின் முதல் மனைவியுடன் பழக்கம் இருததாக அக்கம் பக்கதினர் கூறியாதக தெரிகிறது. இதனால் அண்ணன் தம்பி இடையில் தகராறு இருதாகவும் இதனால்தான் செய்வினை விவகாரம் கொலை வரை சென்றதாகவும் கூறியுள்ளனர் இதனால் அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் கொலைவழக்கு பதிவு செய்து தலைமறைவான தம்பி குமாரை தேடிவருகின்றனர் அண்ணனை தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: