டோக்கியோ: இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய மோடியும், பைடனும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். பின்னர், டோக்கியோவில் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.