ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் அரிப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை மற்றும் கான்கிரீட் குழாய்கள் வெளியே தெரிகின்றன. ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடியில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக, வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறைக்காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து, பழைய தேவாலயம் வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதி முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.