சென்னை: இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர், சாலை விபத்துகளில் உயிர் இழப்பை குறைக்க நம்மைக்காக்கும் 48 என்ற பெயரில் இலவச சிகிச்சை திட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரகூடிய நிலையில் அதே நோக்கத்துடன் சென்னை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்த்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.