அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே வீட்டில் கிளப் வைத்து சூதாடிய ஊராட்சி தலைவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர் குளம் மாணிக்கம் குடியிருப்பில் உள்ள அடைக்கலம் என்பவரின் வீட்டில் சூதாட்ட கிளப் நடப்பதாக நாகுடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று அதிகாலை அடைக்கலம் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் சூதாட்ட கிளப் நடப்பது தெரியவந்தது.