தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அங்கீகாரம் பெற 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை என  தகவல் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 494 தனியார் கல்லூரிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Related Stories: