திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் குளிக்கும்போது மாயமான ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நேற்று மாலை 3 மணி குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் தண்ணீருக்குள் மூழ்கி மாயமானார். அதேபோன்று, குளத்தின் கீழ்கரையில் குளித்துக் கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுமி முஸ்கான் என்பவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர்.